பல்லவி
ஸ்ரீ ராம ராமாஸ்1ரிதுலமு காமா
நேரமா ப்3ரோவ பா4ரமா
சரணம்
சரணம் 1
மனஸா நா மாட வினி ஸாரெகு
முக்தி கனுமீ 1மஞ்சித3னுமீ (ஸ்ரீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ ராம/-ஆஸ்1ரிதுலமு/ காமா/
ஸ்ரீ ராமா/ ராமா/ (உன்னை) நம்பினவர்கள்/ அல்லவா/
நேரமா/ ப்3ரோவ/ பா4ரமா/
தவறேதுமுளதோ/ காத்தல்/ பளுவா/
சரணம்
சரணம் 1
மனஸா/ நா/ மாட/ வினி/ ஸாரெகு/
மனமே/ என்/ சொல்லை/ கேட்டு/ எவ்வமயமும்/
முக்தி/ கனுமீ/ மஞ்சிதி3/-அனுமீ/ (ஸ்ரீ)
முத்தி/ காணேன்/ 'நல்லது'/ என்று சொல்லேன்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
5 - ஒப்புகோகவே - ஜெப்புகோகவே : இவ்விடத்தில் 'ஒப்புகோகவே' என்பதே பொருந்தும்.
11 - ராஜாதி4ராஜுனகு - ராஜாதி4ராஜுனு : இவ்விடத்தில் 'ராஜாதி4ராஜுனகு' என்பதே பொருந்தும் என்று நான் கருதுகின்றேன்.
Top
மேற்கோள்கள்
2 - பலு வித4 கர்மம்பு3லயந்து3 மர்மமு தெலுஸுகோ - பல விதமான வேத கருமங்களின் உட்பொருளினை அறிந்துகொள் - இது குறித்து, கண்ணன், கீதையில் (3-வது அத்தியாயம், 9-வது செய்யுள்) கூறியதாவது -
"வேள்விக்காகவே அன்றி, இயற்றப்படும் மற்ற கருமங்கள் யாவும், உலகோரைப் பிணைக்கின்றன.
எனவே, குந்தி மகனே, பற்றினைத் துறந்து, (வேள்விக்காகவே) கருமங்களை இயற்றுவாய்."
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
மேலும், தியாகராஜர், தமது 'நீ ப4க்தி பா4க்3ய ஸுதா4' என்ற கீர்த்தனையில், 'வேதங்களில் உரைக்கப்பட்ட கரும நெறி (பற்றைத் துறந்து இயற்றப்படாதாகில்), துயர் விளைவிக்கும், பிறப்பு-இறப்பெனும் போக்குவரத்திலேயே கொண்டு சேர்க்கும்' என்கின்றார்.
Top
7 - க்ரு2த-க்ரு2த்ய - யாவற்றையும் சாதித்தவன் - சில கீர்த்தனைகளில், தியாகராஜர், இறைவனை, 'பூர்ண காம' (இச்சைகள் நிறைவேறப்பெற்றோன்) என்றும் குறிப்பிடுகின்றார். இதுகுறித்து, கீதையில் (3-வது அத்தியாயம், 22-வது செய்யுள்), கண்ணன் கூறியது -
"பார்த்தா! எனக்கு, மூவுலகிலும் செய்யவேண்டியது ஏதுமில்லை.
நான் அடையாததோ, அடையவேண்டியதோ இல்லை. ஆயினும், பணிகளை நான் தொடர்ந்து இயற்றுகின்றேன்."
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
Top
விளக்கம்
1 - மஞ்சிதி3 - நல்லது - ஒப்புதலளித்தல்
3 - ஹரினி கலுஸுகோ - அரியைக் கலந்துகொள். இதற்கு 'அரியுடன் இணைவாய்' என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால், இவ்விடத்தில், அத்தகைய பொருள் பொருந்தாது. எனினும், 'அரியைக் கலந்துகொள்' என்பதுவும் ஒருவருடைய சொந்த அனுபவத்தினையே குறிக்கும். இதனை, சொற்களினால், மற்றவருக்கு உணர்த்த இயலாது.
4 - தம த்ரோவயேகமு - தமது நெறி ஒன்றுதான் உண்டு - 2-வது சரணத்தில் கூறப்பட்ட 'கருமங்களை'க் குறிக்கும். தியாகராஜர், தனது மனதிற்கு, 'கருமங்களின் சாரத்தினை அறிந்துகொள்' என்கின்றார்.
Top
6 - மதமு - நெறி - இது, பல 'விந்தையான' வழிபாட்டு முறைகளையுடைய, 'கௌள மார்க்கம்' எனப்படும் 'சக்தி வழிபாட்டினை'க் குறிக்கலாம். ('விந்தையான' என்பது, அவற்றினை, 'பொது மக்கள், எளிதில் புரிந்துகொள்வது கடினம்' என்ற பொருளில் கூறப்படுகின்றது.)
8 - ஜாட3 தெலுஸுகொனி - குறிப்பறிந்து - இது, இறைவனைக் குறிப்பதாகவோ, அல்லது தியாகராஜரைக் குறிப்பதாகவோ கொள்ளலாம்.
9 - சரணம் 10 - இந்த சரணத்தில் கூறப்பட்டவை, எந்த சூழ்நிலையில் கூறப்பட்டன என்று அறியாது, சரிவரப் பொருள் கூறுவது கடினம்.
10 - சரணம் 12 மற்றும் சரணம் 13 - இவற்றினை இணைத்தே பொருள் கொள்ள இயலும். 12-வது சரணத்திற்குத் தனியாக பொருள் கொள்ள இயலாது.
Top
12 - கூர்து - (வெற்றியினைச்) சேர்ப்பேன் - இறைவனின் விருதுப் பட்டியலில் சேர்ப்பேன் என. சில புத்தகங்களில், இச்சொல்லுக்கு, (இறைவனுக்கு) 'அர்ப்பணிப்பேன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு, அத்தகைய பொருளேதும் இல்லை.
இந்த கீர்த்தனை, ஒரே கருத்தில் எழுதப்படவில்லை. முதல் ஏழு சரணங்களில், தியாகராஜர், தமது மனதிற்கு அறிவுரை கூறுகின்றார். மற்ற சரணங்களில், அவர், இறைவனைக் குறை கூறுகின்றார் மற்றும் இறைவனிடம் தன்னுடைய தீர்மானத்தினைக் கூறுகின்றார்.
முதல் ஏழு சரணங்களில் கூறப்பட்டவற்றின் சூழ்நிலை விளங்காததால், சரிவரப் பொருள் கொள்வது கடினம். புத்தகங்களில், முரண்பாடான பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
காதல் மன்னன் - காமன்
Top